நாசர் தலைமையிலான அணி நடிகர் சங்க பொறுப்பேற்ற பிறகு பல அதிரடி மாற்றங்கள் செய்து வருகின்றனர். SPI சினிமாஸ் வசம் இருந்த நடிகர் சங்க இடத்தை பணம் கொடுத்து மீட்டனர்.
சங்கத்தின் கடனை அடைக்க இப்போது புது முயற்சியாக சினிமா நட்சத்திரங்கள் பங்கேற்கும் Cricket போட்டி ஏப்ரல் 10ம் தேதி சென்னையில் நடத்தவுள்ளனர்.அதற்காக ரஜினி, கமல் உட்பட அணைத்து நடிகர்களும் இதில் கலந்துகொள்வார்கள் என விஷால் தெரிவித்துள்ளார்.
நடிகர் சங்க வளாகத்தில் இன்று நடந்த 'அவன் அவள்' பட ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் இத்தகவலை கூறியுள்ளார்.

0 comments:
Post a Comment